Saturday, May 3, 2008

அவள் ஒரு கண்ணாடிப்பெண்


ஏன் எனக்கு கோபம் வந்தது
அவள் ஒரு கண்ணாடிப்பெண்
அவள் வீட்டுக்கு வேலைக்கு போயிருந்தேன்
முண்டாசுகட்டி மண்வெட்டி பிடித்து சிமெண்ட் கலவை கலந்தேன்
உன்னை பார்க்கவில்லையடா சத்தியமாக வேறெரன்றை பார்த்தேன்
எல்லாப் பெண்களைப் போலவே அவள் கண்களும் பொய் பேசியது

அவள் ஆயுதம் எதுவுமே இல்லாமல் எனக்குள் ஏதோ சின்னம்
கனப்பொழுதில் கட்டி முடித்துவிட்டால்
என் கற்பனை பல்லாக்கு உடனடியாக தூக்கிச் சென்றது.
சூரியனைச் ருசித்த என் உடல் வியர்வையாய் திகற்றியது.
என் உடல் தவித்தது
அவள் உள்ளம் தவித்தது
என் களைப்பை போக்க கருப்பட்டி கலந்து
காப்பித் தண்ணி கொடுத்தாள் அந்த கண்ணாடிப்பெண்
புது(த்)உணர்ச்சியுடன் வேலை செய்தேன்

அவள் தந்த காப்பித் தண்ணியால் அல்ல
அவள் கண்கள் தந்த காந்தப்புணர்ச்சியால்

எப்போதோ மறந்தவள் அன்று சாலையில் கண்டாள்
நலம் கேட்டாள் வெட்கத்துடன் சிரித்தாள்
கண்ணாடியை விளக்கி என்னை பார்த்தாள்
நான் இப்போது கம்யூட்டர் தொடும் ஊழியனாம்

பக்கத்தில் நின்றரள் என் தங்கை
வீட்டுக்கு வந்ததும் கிண்டளடித்தாள்
கண்ணாடி கண்ணாடி கண்ணாடி என்று
கோபத்தில் அவளை அறைந்து விட்டேன்
ஏன் எனக்கு கோபம் வந்தது.

No comments: