Thursday, October 18, 2007

என் ஜhதியைக் கேட்காத ஊர் எங்கிருக்கிறது.

பூ நுhலில்லை
அர்ச்சனையில்லை
யாரும் என்னை ஐயர் என்று
சொல்லத் தேவையில்லை..

என் பாட்டனார்
மணியடித்தார்
என் தாத்தார்
மந்திரம் சொன்னார்
என் அப்பார்
மண்டைக்கனம் உனக்கு
என்று அத்தனையையும்
உதறிவிட்டு ஒருத்தியுடன்
ஓடிவந்தார்

இப்போது நான்
திராவிடர்கள் என்னை
பாப்பான் என்று விரட்டுகிறhர்கள்
பார்பணர்கள் என்னை
பறையன் என்று மறிக்கிறhர்கள்.

நான் எதையுமே கேட்கவில்லை
நான் பட்டாபியாகவேண்டாம்
கலெக்டர் ஆகவேண்டாம்
எனக்கு வேண்டியதெல்லாம்
தமிழ்நாட்டில் என் ஜhதியைக்
கேட்காத ஒரு ஊர்... இருக்கிறதா..

மீன் குழம்பு சாப்பிட்டேன்

என் துhண்டிலில் சிக்கிய மீன்
பெண்ணா என்று எனக்கு தெரியாது.
ஆனால் பிடித்த மீன்களை
அவள் முன் கொண்டு போனபோது
இரண்டு மீண்களும் கண்களை
உருட்டி என்னை சுழற்றின
துhண்டில் மீனுக்குப் போட்டேனா
இல்லை அவளுக்குப் போட்டேனா

அவள் சமைத்து தந்த
குழம்பின் ருசி
அப்பப்பா அவ்வளவு
அற்புதமப்பா
விரல்களில் இடுக்குகளில்
ஒட்டியிருந்த கடைசிசொட்டு
எச்சில் கலந்த குழம்பையும்
உறிஞ்சிக் குடித்தேன்
பாலாய்போ பால் பல் ஒன்று
நகக்கண்ணில் பட்டுவிட்டது
பாவம் இரண்டு நாட்காளாய்
விரல்களை உதறிக் கொண்டே
திரிந்தால் அவள்

Sunday, October 14, 2007

கற்றது தமிழை நான் விமர்சிக்க விரும்பவில்லை


கற்றது தமிழ் படம் பார்த்தேன்
ரொம்ப நாளைக்கு பிறகு
தமிழ் நாட்டில் ஒரு தரமான சினிமா...

ஈரான் சினிமா போன்ற உணர்வுதரும்
இறுதி காட்சியின் தீர்வு
கொஞ்சம் தமிழ் சினிமாக்காரர்களின்..
இமைகளை உயரச்செய்திருக்கிறது...


கட்டாயம் இதின் தாக்கம்
இனிவரும் தமிழ்சினிமாக்களில்
பிறதிபளிக்கும் என்பதில்
எனக்கு நம்பிக்கையிருக்கிறது.

இந்த படத்தில் நல்ல முறையிலான
காண்பித்தல் அறிமுகமாகியிருக்கிறது
சில சமூக நற்க்கருத்துக்களும்
வந்துள்ளன,,,, வரவேற்கிறேhம்

இதன் குற்றங்களை பற்றி
நான் விவாதிக்க விரும்பவில்லை
காரணம் இது போன்ற நல்ல
கதைசொல்லல் சினிமாக்கள்
தொடர்ந்தால் வருங்காலங்களில்
நல்ல தொழில் நுட்பம் அடங்கிய
மக்கள் ரசனைக்குரிய படங்கள் வெளியாகும்
என்று எதர்பார்ப்போம் அதனால்
இது ஆயிரம் குற்றங்கள் கொண்டிருந்தாலும்
இதனை விதிவலக்காக நாம் எல்லோரும்
பார்த்து ரசிக்கலாமே...

Monday, October 8, 2007

என்னவளே நீ சாலையில் நடந்து சென்றாய்...



எதிர்பாராமல் நீ என்னை
பார்த்து விடவேண்டும் என்று
எதிர்பார்த்துக் கொண்டே
நடந்து வருகிறேன்
தினம்தோறும்

சாரலும் இல்லை
மழைத் தூரலும் இல்லை
உன் பார்வை பட்டதும்
நனைந்து போகிறேன்.

உன் மனதில் ஆணவம்
இருக்குமோ? என்று எனக்கு தோன்றுகிறது
எல்லோரும் உன்னை பார்க்கிறார்கள்
என்று நினைக்கிறாயா? இல்லை
எல்லோரும் பார்க்கவேண்டும்!
என்று நினைக்கிறாயே ஏன்?
அடிக்கடி உன்னையே நீ சோதித்துக் கொள்கிறாய்.

நீ சிரிப்பாயா? அந்த பையனிடம்
நீ சிரித்த போது தான்
கண்டு கொண்டேன்.
சிரிப்பிலும் மொழி ஒன்று உண்டென்று

நீ மௌன விரதம் இருக்கிறாயே
தயவு செய்து உன் கண்களை
துணியால் மறை
அவைதான் அதிகமாக பேசுகின்றன.

உன் காலடித் தடத்தை
பார்க்காதவனே
உலக அதிசயத்தை
வரையறுத்தவன்....

Friday, October 5, 2007

பாலச்சந்தர் இவர்களுக்ளோடு என்ன படம் எடுப்பார்


சச்சின்- அவள் மூத்தவள்

லல்லுபிரசாத் யாதவ் - லல்லுவின் லீலை

பிரிட்னிஸ்யர்ஸ் - பார்த்தாளே இவள் வசம்

கருணாநிதி - முன்னூறு முடிச்சு

அழகிரி - வெற்றிக்கண்

கங்குலி - உன்னால் முடியாது தம்பி

சானியா மிர்சா - அபூர்வ வெற்றிகள்

மன்மோகன் சிங் - புன்னகை சர்தார்ஜூ

இல.கணேசன் - மானமே இல்லை

பிரசாந்த் - புது புது வழக்குகள்

வைகோ - மிச்சமில்லை மிச்சமில்லை

டோனி - இருவதுக்கு இருவது

விஜயகாந்த் - வெல்லத்தான் நினைக்கிறேன்.

ஜெயலலிதா - அனுபவி ராணி அனுபவி


சரத்குமார் - கட்சியின் நிறம் மஞ்சள்

அஜூத்குமார் - தப்பான படங்கள்

ஃகானா கிரிக்கெட்(மெட்டு நீங்கள் உருவாக்கிக் கொள்ளுங்களேன்)


கிரிக்கெட்டு கிரி கிரி கிரிக்கெட்டு

கிரிக்கெட்டு நம்ம நாட்டு கிரிக்கெட்

டோனி போய் ஜெயிச்சுபுட்ட 20/20 கிரிக்கெட்

தல கங்குலியும் டிராவிட்டும் விட்டுவந்த கிரிக்கெட்



வயசாகிப் போச்சு நம்ம டெண்டுல்கரு தாத்தாவுக்கு

பிசகாகிப் போச்சு நம்ம கங்குலி தாதாவுக்கு

விடிஞ்சாக்கா காத்திருக்கு விளம்பரக்காரு..

ஆட்டத்தில இறங்குனதும் மூட்டைய கட்டுறாரு பாரு...(கிரிக்கெட்டு)


யுவராஜூ அடிச்சாக்கா பந்து போகுது சிக்ஸரு..

டோனி பயந்து போயு கிரவுணடலு பண்ணுறாரு மக்கரு..

பாயும்புலி பவுலரெல்லாம் பதுங்குறது ஏங்க

படுத்திருக்கும் கங்காருவோ குதிக்குது போங்க..


வேல்டு கப்பு வாங்குனத என்ன பண்றீங்க

வோல்டு கப்பா ஆகிப் போயி தூசி துடைக்கிறீங்க

20/20 யில நடந்துச்சு அழகான காமெடி

மழை வந்தா தேவாலாம்னு ரசிகரெல்லாம் காவடி.


கிரிக்கெட்டு கிரி கிரி கிரிக்கெட்டு
கிரிக்கெட்டு நம்ம நாட்டு கிரிக்கெட்
டோனி போய் ஜெயிச்சுபுட்ட 20/20 கிரிக்கெட்
தல கங்குலியும் டிராவிட்டும் விட்டுவந்த கிரிக்கெட்


சரிக்கட்டு வாரியத்தை சரிக்கட்டு

கிரிக்கெட்டே தெரியாத தலைவர்கள சரிகட்டு

சம்பாரிச்சு அள்ளிப்போக கொண்டாட பக்கெட்டு

நீ எடுக்கவேணாம் விக்கெட்டு ஜெயிக்க வேணாம் ரன்ஹ¨ட்டு

காசைகாட்டி கண்ணைமறச்சிரு...

கருப்பு பணத்தை மூஞ்சில அடிச்சிரு.

ராமரை நான் பார்த்திருக்கிறேன் பழகியிருக்கிறேன்.


அவன் எடுத்த அம்பு வழிதவறி

என்கண்களில் பாய்ந்துவிட்டது

அவன் அழுது துடித்துவிட்டான்

இறுதியில் அம்பில் வடிந்தது தேன்.


நான் எச்சில் வைத்து தந்த

தேன் ராட்டியை ருசித்து

சாப்பிட்டுவிட்டு

நண்பா ரொம்ப சுவை

இதுபோல கிடைக்காது என்றான்.


என் இன்னொரு நண்பனொடு

சண்டையிட்டநேரம் பார்த்து - அங்கே

வந்தான் ராமர்,

நண்பனான எனக்காக கூட

அவன் எதிராளியை

ஒருஅடி அடித்திட வில்லை


அவன் அக்காமார்கள்

அத்துனைபேரும்

14 வயசில் கட்டிப்போனார்கள்

இவன் மட்டும் யாரும் இல்லாமல்

என்னுடன் வந்துபேசுவான்


இப்போது எல்லோரும்

பத்திரிக்கையில் ராமர் எங்கிருக்கிறார்

என்று தேடுகிறார்கள்

இப்போது தான் என் ராமர்

நினைவுக்கு வருகிறான்

அவன் எங்கே?

என்று நானும் தேடுகிறேன்.


அந்த வானம் தோண்டும்

என் குழந்தை பருவ நண்பன்

ஒட்டக்கவுண்டர் பையன்

இப்போது எங்கிருக்கிறான்

என்று தெரியவில்லை


மண்வெட்டும் பணியில் இருக்கிறானாம்!

ஒரு வேளை சேதுசமுத்திர திட்டப்படி

அந்த பாலத்தின் மண்ணை தோண்ட

காத்திருக்கிறானோ என்னவோ?

Thursday, October 4, 2007

விலை மாது


என் இதயம் என்னும்

வெள்ளிக் காகிதத்தில்

கவிதை எழுதியவர்களை விட

அதை கசக்கி

பிழிந்தவர்கள்தான் அதிகம்


தாத்தனும் அப்பனும்

மகனுமாய் சேர்ந்து

மாறி மாறி என்னை

ரசித்தார்கள் நீ தான்

என் கனவுக் கன்னி என்று

ஆனால் இன்னும் நான்

முதிர்கன்னி


நான் செய்த தவத்தால்

கிடைத்த கணவன் இவன் என்று

கடவுளை கும்பிடுவோரே

மனைவிகளே நான் தான் அவன்

பத்திரமாக இருக்க

காரணம் என்று உங்க

ளுக்குதெரியுமா?


உலகத்திலேயே பொது சொத்து

நாங்கள் மட்டும் தான்

என்று நினைக்கிறேன்

ஏனென்றhல் எங்களை

இவள் அரசாங்கத்துக்கு சொந்தம் என்றேh

அடுத்தவளுக்கு சொந்தமென்றேh

யாரும் சொல்வதுமில்லை

நினைப்பதுமில்லை அந்த நேரத்தில்

பசுக்கள் ஆயிரம்

காளைகளைக் கண்டாலும்

கன்றுக்கு நக்கிக் கொடுக்க மறக்காது...

எங்களுக்குள்ளும் உணர்வு இருக்கிறது.
















Monday, October 1, 2007

எல்லோர் பார்வையிலும் காமம் இருக்கிறது.


என் ரசனைக்கு நான் என்றுமே குறைவைத்ததில்லை. நான் எல்லாவற்றையும் ரசிக்கிறேன்! நான் என் மனதை கட்டிப் போடுவதில்லை என்று எல்லோரும் பேசிவிட்டு ரசித்ததை சொல்ல மறுக்கிறேhம் நான் விதி விலக்கானதை இங்கே திறக்கிறேன். ரசிக்கும் போது உங்கள் உள் மனதையும் கேட்டுக் கொள்ளுங்கள். காம ரசனை தவறh என்று

உன்னை உன் அம்மா

பெற்றhளா? இல்லை பிதுக்கி

எடுத்தாளா?

வேகவைக்காத

ரொட்டி போலஇருக்கிறhயே!

மேற்கத்திய ஆடையில் நீ

மேல்சீலை இல்லாமல்

நடந்து வரும் போது

அதிர்ந்து குலுங்குகிறது

என் இதயம்!

மூடிமறை ஜன்னலை

பக்கத்து வீட்டு காற்று

உன் மேல் படுகிறது.

என்ன அதிசயம்!

காம்புகள் தான் பூக்களை

சுமக்க பார்த்திருக்கிறேன்!

உன் மார்பூக்கள்

காம்புகளை சுமக்கின்றதே!

நான் தீண்டாத உன் மேனியை

உன ஆடை தீண்டி என்னை

பொறhமை கொள்ள வைக்கிறது.