Wednesday, February 18, 2009

வைகோ என்னும் பாவமான ஆசாமி


வைகோ தமிழகத்தின் பேச்சு புயல் அனல் தெறிக்கும் ஆற்றல் படைத்த அரசியல் வாதி மக்கள் செல்வாக்கில் கருணாநிதியையே ஓரம் கட்டிவிடுவார் என்று எதிர்பார்த்த வைகோ
கருணாநிதியால் திமுகவிலிருந்து படாடோபமாக வெளியேற்றப்பட்டார் இனி திமுகவின் கதி அதோ கதி என்று தமிழகமே எதிர்பார்த்திருந்தது, பல திமுகவினரும் அவருடன் சேர்ந்து பிரிந்து சென்றனர். அந்த வைகோ இன்று....

விடுதலைபுலிகளுக்காக போராடும் நல்ல தமிழனாக...
தன் கட்சிக்கு சீட்டுபெறுவதற்காக கூட்டணிவிட்டு கூட்டணி தாண்டி அலைபவராக..
கருத்துகணிப்பில் பாமக வை விடவும் குறைந்த மதிப்பை பெற்றவராக...
விடுதலைபுலிகளை தவிர வேறு எந்த அரசியல் காரணமும் கிடைக்காத அரசியல் துறவியாக....
ஐயோ அந்த பரிதாபம் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக சிலநாட்களுக்கு முன்பாக நடந்த கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ள மேடையேறிய வைகோவை மாணவர்கள் தொடர்ந்து எதிர்த்து குரல் கொடுத்தார்களாம்.. வைகோ வேதனையும் மேடையைவிட்டு இறங்கியிருக்கிறார். 3முறை இதேபோல நடந்திருக்கிறது. கடைசியில் கட்சிபேதத்துடன் இப்படி நடந்து கொள்ளாதீர்கள் என்று வருத்தப்பட்டிருக்கிறார்.

வைகோ இப்போது எதையோ உணர்ந்திருக்கிறார் என்பது மட்டும் உண்மை

Tuesday, February 17, 2009

இரண்டு தாத்தாக்களும் பட்ஜெட்



இரண்டு தாத்தாக்களும் பட்ஜெட்டை தாக்கல் செய்துவிட்டார்கள்
இரண்டு தாத்தாக்களும் படுத்துக் கொண்டே சூப்பர் என்கிறார்கள்.
பட்ஜெட் இரண்டும் வந்துவிட்டன மத்தியிலும் மாநிலத்திலும்
வரி ஏதுமில்லை.... வருமானம் நிறைந்திருக்கிறது..
அந்நிய செலாவணி வரத்து அதிகம்..
வேலைவாய்ப்புகள் கூடியிருக்கிறது என்கிறார் பிரணாப்
கூடவே மருத்துவமனையில் படுத்துக்கொண்டே ஓ.கே இது மக்களை மனதில் வைத்து போட்ட பட்ஜெட் என்கிறார் மன்மோகன். வரிபோட்டா ஓட்டு இல்லை ஓட்டுபோட்ட பிறகு வரி போடுவோம் என்று சொல்லிக்கொண்டே பட்ஜெட்ட போட்டிருக்கிறார் பிரணாப் தாத்தா..
ஆனால் விலைவாசி மட்டும் குறைந்த பாடில்லை...
சர்வதேச சந்தையில் 10 ரூபாய் பெட்ரோல் விலை ஏறியதற்கு 3ரூபாய் உள்ளுரில் ஏற்றினார்கள். சர்வதேச சந்தையில் 20 ரூபாய் குறைந்த பின்னும் இங்கே 2ரூபாய் குறைத்திருக்கிறார்கள். என்ன கொடுமைசார் இது....
அங்கே மன்மோகன் தாத்தாவிற்கு உடம்பு சரியில்லை என்று ஆஸ்பத்திரியில் இருக்கிறார்.

நமது தமிழ்நாட்டில் அதுபோலவே கலைஞர் தாத்தா ஆஸ்பத்திரியில்...
அன்பழகன் தாத்தா வருமானத்தை விட 10000கோடிக்கு மேல் பட்ஜெட் தாக்கல் செய்து சாதனை செய்திருக்கிறார். ராமதாஸ் இது பாதி சூப்பர் பாதி டூப்பர் என்கிறார்.
பாலம் கட்ட10000 கோடி ஒதுக்கிய ஒரே அரசு என்று சாதனை செய்தி....... இலவசத்துக்கு மட்டும் கூட்டிகழித்து பார்த்தால் 2000கோடி ஒதுக்கீடு (இன்னுமும் உள்ளே இருக்கிறது) இது ஒரு தொலைநோக்கு பார்வையில்லாத பட்ஜெட் என்கிறார். ஜெயலலிதா..
ஒட்டுமொத்தமாக பார்த்தால் ஏதோ இருக்கு ஆனா இல்லை பூச்சாண்டிதான் இரண்டுலயுமே...

Monday, February 16, 2009

விடுதலை புலிகள் இல்லையென்றால்


விடுதலை புலிகள் இல்லையென்றால்

இலங்கையில் ஏதெல்லாம் இப்போது இல்லாமல் போகும்

நான் எழுதுவதைவிட இதனை உண்மையாக உணர்ந்த இலங்கை தமிழவர்கள் எழுதினால் தான் சரியாக இருக்கும் அவர்களுக்காக இந்த பகுதியை விடுகிறேன். பதிலுக்காக காத்திருக்கிறேன்... இல்லை காத்திருக்கிறோம்

Saturday, February 14, 2009

vikatan ini avargal valayai parkalam


itho kilithu pilanthu vittargal anantha vikatan niruvanathar
30 mark 40 mark nu mark pottu tamil thiraipadangalai thittikondu,
etho teACHer studentku mark poduvathu pola iruntha anantha vikatanuku sms mani avargaluku avalgala adithu kondargal

theaterukul kidaitha coments

50 rupaiku ticket eduthathuku oru quater adichirupan

enna machan theaterla than irukoma yeatho wine shopla iruka madiriya iruka

sakila kudumbasthiriyayiruchu

enna kathai machan entha padathula machan athukullayum maranthuttiya smsla thanda
yanya tension akura

intha week vikatan vanglamnu ponan rapperla sms still thirumbi vanthuttan

ethana markda ithuku...... avangala pottukkattum ana onnu vathiyarthana mark poduvaru
avara examla fail ayittaru machan anantha vikatan thatha