Monday, March 31, 2008

ஏதேதோ பேசுறேன் வருந்தவே இல்லை


சல்லிப் பயகிட்டயும் மனசிறுக்கும்
சஞ்சலப்பட்டாதான் முகஞ்சுளிக்கும்
கோபம்வந்தா வெட்டிப்பய
சும்மா இருந்த சொம்பப்பய

ஏதா இருந்தா என்னத்தான்
எப்படி இருந்தா என்னத்தான்
கோபம் வந்தாலும் அடக்கிக்கிறேன்
சினிமா பத்திநாலும் பொருத்துகிறேன்.

ஏன்டானு கேட்டா சொல்லமாட்டேன்
ஏதோ கணக்கிருக்கு விளக்கமாட்டேன்
புத்தகம் படிச்சாத்தான் அறிவாளியா
குத்தம் இருந்தாலும் அறிவாளிதான்.

ஏதேதோ பேசுறென் வருந்தவே இல்லை
என்னோட சாதிசனம் திருந்தவே இல்லை
எழுத்தாளருக்கு தேவை எழுத்தின் வரலாறு
எடுக்காமல் போனல் யார் சொல்லுவார்


சேக்ஸ்பியர் காப்பியடித்ததையும்
கன்பியுசியஸ் கடந்து வந்த பாதையும்
அவர்கள் ஏராளம் பயணித்துவிட்டார்கள்
நம்மாட்கள் நான் புதிதாக கண்டுவிட்டேன்
என்று மார் தட்டுகிறார்கள்.

மீண்டும்
ஏதேதோ பேசுறென் வருந்தவே இல்லை
என்னோட சாதிசனம் திருந்தவே இல்லை