சினிமாவில் நிர்வாணம் அவசியமா? இல்லையா? என்ற கேள்வி, பல வருடங்களாக தமிழ் சினிமா படைப்பாளிகளிடம் கனமான விவாதமாக இருந்து வருகிறது. இந்த கட்டுரை அவ்விவாதம் சரியா? இல்லை தவறh? என்று விவாதிக்கப் போவதில்லை.....
காரணம், நான் நல்ல தொழில் நுட்பக் கலைஞனாக மட்டுமே இருக்க விரும்புகிறேன். என் பார்வையில், நிர்வாணம் சினிமாவில் காட்டப்படும் போது என்ன விதமான உணர்வைத் தருகிறது என்பதை மட்டுமே பேசுகிறேன்.
நிர்வாணத்தைக் காட்டுவது அழகியலா? இல்லையா? என்று கேட்டால், பிறகேன் சினிமா கற்றுக் கொடுக்கும் கல்லுhரிகளில் நிர்வாணப் புகைப்படக்கலை என்று ஒரு பாடம் வைக்கப்பட்டிருக்கிறது, என்று எளிதாக பதில் சொல்லிவிட முடியும். அது சரியாக இருக்காது.
ரித்விக் கடாக்கிடம் ஒருமுறை கேட்கப்பட்ட கேள்வி.. யாதெனில், ஏன் நம் திரைக் கலைஞர்கள் நிர்வாணம் சம்மந்தமாக அதிகம் விவாதிக்கிறhர்கள்! அதற்கு அவர் சொன்ன பதில் அதனைக் கொண்டு நிறைய பணத்தை மக்களிடம் கொள்ளையடித்துவிடலாம் என்றhர். உண்மையில் நம் நாட்டினர் அவ்வாறு தான் நிர்வாணத்தை நாடுகின்றனர். நிர்வாண விசயத்தில் புத்தகத்திற்கும் சினிமாவிற்கும் இடையே ஆரோக்கியமற்ற விவாதம் பேசப்படுகிறது. புத்தகத்தில் எவ்வளவு அருமையாக நிர்வாணத்தை விவரிக்கிறhர்கள், ஆனால் சினிமாவில் சொன்னாள் மட்டும் கோபம் வருவானேன். இது சினிமாக்காரர்களின் வாதம்.
பேசும் படம் மௌனப்படத்தைவிட எதையோ இழந்திருக்கிறது , உண்மையில் மக்களின் சிந்தனை மழுங்கடித்து அவர்களின் கற்பனைகளை நமக்குள் தினிக்கிறhர்கள். சாப்ளின் சொன்னது இந்த வார்த்தைகள். உண்மைதான் சினிமாவ மக்களின் உணர்வுகளில் பாய்ந்து நேரடிப் பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது. சினிமா என்னும் உணர்வுகளை பாய்ச்சும் ஊடகத்தில் நிர்வாணம் காட்டப்படும் போது.... என்னென்ன விளைவுகளைத் தருகிறது என்பதற்காக சில படங்களை எடுத்துக் கொள்கிறேன்..
முதலில் மூன்று வகை தலைப்புகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறேன்
1, உணர்வுகளைத் துhண்ட
2, சொல்ல வேண்டியதை மறைமுகமாக சொல்ல
3, குறிப்பிட்ட ஒரு நிகழ்வின் உச்ச நிலையை சொல்ல
1. உணர்வுகளைத் துhண்ட
நேரடியாக பொருள் கொள்ளலாம் (உதாரணம் நீலப்படங்கள்)
2,சொல்ல வேண்டியதை மறைமுகமாக சொல்ல
நம் நாட்டு சினிமா தான் இதற்கு உதாரணம்(இந்தியா)
அதே பொருள் வர ஆனால் மறைத்தே, அந்த கருத்தை அதற்கு தகமான வேறு காட்சிகளின் மூலம் உணர்த்துவது.
3.குறிப்பிட்ட ஒரு நிகழ்வின் உச்ச நிலையை சொல்ல படங்களை இதற்காக இரண்டு படங்களை எடுத்துக் கொள்கிறேன்.
titanic
starmaker
இதில் titanicயை பொருத்தவரை அதில் வரும் நிர்வாணக் காட்சியானது , இப்படி ஒருத்தன் தன்னை பார்த்தான் என்பது தனக்கு மாப்பிள்ளையாக வரப் போகிறவனுக்குத் தெரிந்தால் தன்னை வெறுத்துவிடுவான், என்று காட்டுவதற்காக கையாளப்பட்டிருக்கும் அந்தக் காட்சியை பார்க்கும் போது யாருக்கும் காம உணர்வு தோன்றhது (அது கையாளப்பட்டிருக்கும் விதத்தில் அழகியல் மேலோங்கி இருக்கும் i wish kamaron).
இதில் மற்றெhரு படமான star maker ல் தன்னுடைய வறுமை நிலையை சொல்லியும் அவன் தன்னை நடிகை ஆக்க மறுக்கிறhனே, என்னை எடுத்துக் கொண்டு சினிமாவில் நடிகையாக்கு என்று தன்னை நிர்வாணப்படுத்தி காட்டுகிறhள் நாயகி. சினிமா, உலகத்தில் மக்களின் வாழ்க்கையில் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது, என்று சொல்ல இந்த நிர்வாணக்காட்சி மிகச் சிறந்த அடையாளம். அது கையாளப்படாமல் இருந்திருந்தால், மிகப்பெரிய இழப்பீடாகவே இருந்திருக்கும் சினிமா மொழியின் உச்சகட்டம் பேசப்படாமலே போயிருக்கும்(குசாபே டொர்னாடோவை பாராட்டாமல் இருக்க முடியாது இந்த காட்சியை பார்க்கும் எந்த திரைக் கலைஞனுக்கும்)
குறிப்பால் கடைசியாக சொன்ன வகையறhக்களை சொல்லியிருக்க முடியும். ஆனால் அழகியல் காணாமல் போயிருக்கும்....... அழகியல் காணாமல் போயிருக்கும் உச்சகட்டம் புரியாமல் போயிருக்கும்.
என் தனிப்பட்ட கருத்து:
நிர்வாணம் மிகச்சிறந்த அழகு நான் ஒவ்வொரு நாளும் குளியலரையில் என் நிர்வாணத்தை பார்த்து என் முழு உருவையும் ரசித்துக் கொள்கிறேன் நான் . (ஒவ்வொரு மனிதனும் நான் தான்)
ஆடையின்றி நிற்கும்
மரங்களுக்கு நடுவே
நான் மட்டும்
நிர்வாணமாக வெட்கி
தலைகுனிந்து ஆடைகளோடு
பின் குறிப்பு
நடிகைகளை வேசிகள் என்று சொன்னாள் பெரிய விவாதமே நடக்கிறது இங்கே பத்திரிக்கை விற்பனை அமோகப்படுகிறது. உண்மையில் அவள் ஏன் அப்படி ஆகிறhள் என்பதற்கு உண்மைகாரணத்தை தெரிந்து கொள்ள ஆசைபடுபவர்கள் star maker திரைப்படத்தை பாருங்கள்.
1 comment:
நன்றாக இருக்கிறது இந்த பதிவு:))
Post a Comment