Friday, May 2, 2008

நான் அவளை நிர்வாணமாக பார்த்து விட்டேன்.


இது என் நண்பனின் கதை

நாங்கள் எல்லாம் முண்டாசு கட்டி
மண் வெட்டும் கூலித் தொழிலாளர்கள்
எப்போதும் போலவே அன்றும் அங்கு
வேலைக்குப் போனோம் நானும் இருந்தேன்
நண்பனும் இருந்தான்...

பாவம் என்ன செய்வான் அவன்
காலையில் யார் சொல்லியும் கேட்காமல்
பஸ் பயணம் இருக்கிறதடா வேண்டாம்
பாட்டிக் கடை பணியாரம் என்று
எல்லோரும் சொல்லியும் கேட்காம்ல்
தின்னதன் விளைவு 11 மணிக்குத் தெரிந்தது

வீடுகட்ட அஸ்திவாரம் தோன்றும் வேலை
பாவம் அவன் அடிவயிற்றில் வலி தொடங்கிவிட்டது.
வீட்டின் முதலாளி ஏரியா ரவுடி...
மேஸ்திரியிடம் சொல்லிவிட்டு கழிப்பிடத்திற்கு வழி கேட்டான்
அனுபவசாலி எதிரே வரிசையாய் இருந்த அறைகளில்
அங்கே டிரம் ஒன்று இருக்கிறதே அதன் அருகில் உள்ள அறை என்றரர்.
அவசரத்தில் அவனும் இந்தப் பக்கமா அந்தப்பக்கமா என்று கேட்காமல்
ஒடிவிட்டான். வேலையை தொடர்ந்து கொண்டிருந்த எங்களுக்கு
அவன் அலறல் சத்தம் கேட்டது.

ஓடிப்போய் பார்த்தால் அறையிலிருந்து வெளியே வந்தான்
கன்னம் சிவந்திருந்தது அவசரமாய் ஓடிவந்தவன்
அடுத்த அறைக்குள் ஓடிவிட்டான்.

மாலையில் திரும்பும் போது தான் சொன்னான்
மச்சான் ஒரு 25 வயசு பொண்ணு குளிச்சிக்கிட்டுருந்துது
ஒடம்புல ஒட்டுத்துணி இல்ல... நானும் அவசரத்துல கதவ தள்ளுனதும்
திறந்துகிச்சு... அந்தப் பொண்ணு ஓ...ன்னு கத்திட்டா முகத்தை மறைச்சிக்கிட்டா
எனக்கு முச்சு பேச்சே இல்ல
குளிச்சிக்கிட்டு இருந்தா அந்த வீட்டோட கடைசி அறை போல
சத்தம் கேட்டதும்

ஒருத்தன் வந்தான்டா எம்மா மனுசனா அவன்
எருமை மாதிரி இருக்கான் அந்தப் பொண்ணு
உள்ள ஓடிப்போச்சு எனக்கு வேர்த்துப்போச்சு
என் சட்டைய புடிச்சான் விட்டான் ஒருஅறை
வாயி உளறுது... எங்கடா வேலை செய்றேன்ங்கறரன்.

நாயர் வீட்டுலன்னதும் தான் விட்டான்.
இல்ல கொன்னுறுப்பான். ஆனா ஒன்னு
மச்சான் ஒரு 10நொடி அப்பாடியோ....
இன்னும் நான் சுயநினைவுக்கு வரவே யில்லை......

No comments: