Thursday, May 22, 2008

சினிமாக்காரன் பத்திரிக்கைக்காரனைவிட மேலானவன்


சினிமாவைப் பற்றிய அடிப்படை அறிவுகூ.ட இல்லாமல்
அதன் தொழில் நுட்பம் உட்பட அனைத்தையும்
பேசும் பத்திரிக்கைக்காரர்களைவிட சினிமாக்காரர்கள் மேலானவர்களே

சினிமா என்றால் என்ன...
அது பொழுதுபோக்கா?
வரலாறு சொல்லமா?
வாழ்க்கையை அப்படியே காட்டுமா
என்று நீங்கள் வகைபிரிக்காமல்
பேசுவதற்கு முன் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்குறீர்கள்

மாதக் கணக்கிலும் வாரக்கணக்கிலும்
காத்திருந்து பத்திரிக்கையில்
மக்கள் படிக்க வேண்டிய தலைப்பு செய்தி
நமீதாவுக்கு அகலமான மனசு......
சிம்புவின் லீலைகள் இது தானா
என்றாவது ஒருவாரமாவது சினிமாவினர் இல்லாத
அட்டைப்படம் வருகிறதா (இந்நாளில்)
இதில் விற்பனைக்காக அவர்கள் தவறு செய்கிறார்கள்
என்று நீங்கள் சினிமாவினை குற்றம் சாட்டக்கூடாது

பத்திரிக்கையில் இருந்து வந்த கனவான்களலெல்லாம்
எடுத்த படங்களை தமிழகம் அறியும்
உங்களுக்கான வேலைகளை உருப்படியாக செய்த
பாடில்லை இங்கே நீங்கள் செய்திருக்கும் மாற்றம்
என்ன தெரியுமா இந்த நடிகர் எப்போது அரசியலுக்கு?
அரசியலுக்கு வர நினைக்கும் ஒரிரு படித்த இளைஞர்களுக்கும்
அருவருப்பை ஏற்படுத்துவது அவர்கள் கதவை சாத்துவது

இந்தக் கட்டுரையின் நோக்கம் நீங்கள்
சினிமாவை சரியாக விமர்சியுங்கள் என்பதோ
வாத்தியார் போல உங்களை நினைத்துக்
கொண்டு மார்க் போட்டு மக்கு வாத்தியார்களாக
ஆகிறீர்கள் என்று சொல்வதோ...
பத்திரிக்கையின் பேரைக்கேட்டாலே
காத தூரம் ஒடும் மக்களிடம் நீங்கள்
ஏற்படுத்தி வைத்திருக்கும் மீப்பெரிய
மாற்றத்தை பற்றியோ இல்லை

தமிழ் சினிமா சத்தியமாக உலகத்தரத்திற்கு
வளரவில்லை என்பது கண்கூடு
ஆனால் அதனை வைத்துக் காசு பார்க்கும்
நீங்கள் என்றாவது ஒருமுறையாவது அதன்
வளர்ச்சிக்காக ஒருகட்டுரையேனும் வெளியிடுகிறீர்களா?
இந்நாட்களில் இதில் சினிமாப் பத்திரிக்கைகளையு சேர்த்தே

வரும் ஒன்றிரண்டு படங்களையும்
எட்டிக் கூட பார்ப்பதில்லை
உலகத்தரத்திற்கு அங்கீகாரம் பெரும்
ஒன்றிரண்டயும் பார்ப்பதில்லை

நமக்கென்ன மக்கள் எப்படிப் போனால்
நமக்கு காசு பார்க்க வேண்டும்
நமக்குத் தெரிந்தவரை வளர்த்துவிட வேண்டும்
சினிமா வளர்வதால் யாருக்கு என்ன
லாபம்.....
ட்ரூஃபோ என்னும் பத்திரிக்கைக்காரனின்
காலத்தில் அழியா அந்தக் கருப்பு
வெள்ளைப் படங்களையும்
அந்த மனிதன் ஏற்படுத்திய புதியஅலை(நியு வேவ்)
மட்டும் தான் சாட்சியாக இருக்கிறது

சினிமாக்காரர்களும் சினிமாவும்
உங்கள் நண்பர்களாகவும்
நட்பு வளையமாகவும் மாற்ற
கொஞ்சமாவது ஒரு ரசிகராயேனும்
உதவுங்களேன்
உங்களுக்கு கமலகாசனைப் பிடிக்காமலா
சிவாசியைப் பிடிக்காமலா
ரஜினியை எம்ஜிஆரைப் பிடிக்காமலா
குழந்தைப் பருவத்தை கழித்தீர்கள்
சினிமா வளரட்டும்....
நல்லபடியாக உங்கள் உதவியோடும்.....

2 comments:

முரளிகண்ணன் said...

உண்மையான அங்கலாய்ப்பு. விகடனும் இப்பேது படம் எடுக்கிறது. பார்த்துவிடுவோம் அதையும்

களப்பிரர் - jp said...

ஞானி னு ஒருத்தர் இருப்பர்.. அவரிடம் கேட்டால் சொல்லிவிட்டு போறார் ... கட்டுரை எழுதி விட்டு போறார்... இதுக்கீலாம் கோவிச்சுகேல்லாமா ?