Saturday, May 24, 2008

போதை....



தண்ணியடிக்காதீங்க,
தண்ணியடிக்காதீங்கண்ணு சொன்னா கேக்குறீங்களா....
இப்ப என்ன ஆச்சு செத்தீங்களா... இப்படீனு ஒரு நாளைக்கு சாராயமே வந்து சொன்னாலும் சொல்லும்..

கள்ளுக்குடிக்கிறது... தமிழனோட கலாச்சாரம்
வெள்ளக்காரன் கண்டுபிடிச்சது மதுவில விபச்சாரம்
கலாச்சாரம் மாறிப்போயி கலர்சாராயம் குடிச்சீங்க.
கல்லீரல் வெந்துபோனது உங்களுக்கே தெரியாது
சைனாக்காரன் கண்டுபிடிச்ச சாராயம்(கள்ளத்தனமா)
சப்பிப்போட்டு பொனமா ஆனீங்களே... ஐயோ....
நாடுமறித்தனத்தை இப்பவாச்சும் மாத்துங்களேன்.

ஒழிஞ்சுக்கிட்டு குடிச்சிக்கிட்டுருந்த காலம் போயி
ஒய்யாரமா வீட்டுக்குள்ள கடைபரப்பும் கண்ணியவான்களே
அது கள்ளச்சாரயம் தானேன்னு கனவுகாங்காதீங்க..
அது ஒரே நாளுள கொன்னுச்சு
இது ஒவ்வொரு நாளும் கொன்னுக்கிட்டு இருக்கு

அரசாங்கத்துக்கு வருமானம் வருசத்துக்கு 8,800கோடி(தமிழ்நாடு)
சுகாதாரத்துக்கு செலவீனம் வருசத்துக்கு 7,000கோடி.
ஆகா... அரசாங்கத்துக்கு லாபங்க அதான்....1,800ன்னா சும்மாவா..
நீங்க குடிங்க... குட்டிச்சுவரா போங்க....

போதையில மெதக்குறதுக்கு மதுமட்டும் தானா ஆதாரம்
ஐயோ.. ஐயோ.....

1 comment:

மங்களூர் சிவா said...

:)))

நல்லா இருக்கு பதிவு.

அந்த word verification கொஞ்சம் எடுத்திடுங்களேன்.