Monday, May 26, 2008

விடுதலைப்புலிகள்- அமெரிக்கா



ஒவ்வொருநாளும் ஏற்படும் உயிரிழ்ப்புகளைக்கண்டு
எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்திக்கொள்ளாத
சிங்கள வெறியரசின் வேசங்கள் அத்தனை அற்புதம்

இந்தியாவிலிருந்து பொருளுதவி வேண்டுமென்றால்
முதல் நாள் பேச்சவார்த்தைக்கு வரும்படி அழைப்பார் பக்சே
இங்கிலாந்திலிருந்து பொருளுதவி வேண்டுமென்றால்
எங்கள் நாட்டின் நிலையைப் பாருங்கள் நாங்கள் மிகநல்லவர்கள்
பேச்சுவார்த்தைக்கு கூப்பிட்டால் வரமாட்டேன் என்கிறார்கள்.
அருமையாக நடிக்கிறார்.

ஆனால், நான் சூழுரைக்கிறேன் அவர்களை ஒழிப்பதே
என் முதல்நோக்கம் என்பார் உள்நாட்டு அரசியல் கூட்டத்தில்

ஒவ்வொரு உயிரின் அருமையும் உலகத்தில் உயர்ந்து நிற்கவே
துடிக்கிறது. ஆனால் தினந்தினம் உயிரிழப்பு.
பெரும்பான்மையான தமிழர்கள் அமைதியையே விரும்புகிறார்கள் என்று
அமெரிக்கர்கள் புதிதாக கண்டுபிடித்துவிட்டார்கள்.
எல்லா தமிழர்களுக்கும் தேவை அமைதிதான்.

ராஜபக்சேவுக்கு சொல்லவேண்டிய அறிவுரையை
விடுதலைபுலிகளுக்கு சொன்னால் எப்படி அது சரியாகும்.
ஏன் எதாவது வியாபாரம் புதிதாக தொடங்கியிருக்கிறீர்களா....

அமைதி பேச்சுவார்த்தைக்கு தயாராகும் அடுத்த நொடியில்
சிங்கள வெடிகுண்டுகளுக்கு கால்முளைத்து தமிழர்பகுதிக்குள் நடந்து வருகிறதே.
என்ன செய்வார்கள் உங்களிடம் வேறுஏதாவது ஐடியா இருக்கிறதா...

நீங்கள் திட்டாத திட்டு இல்லை மாவோயிஸ்டுகளை
நேபாளத்தை பாருங்கள் மக்களின் முழுமையான அரசாக
மலர்ந்திருக்கிறது இன்றைய மாவோயிஸ்டு
என்ன வியாபாரத்தில் மந்த நிலையா..
திடீரென புதுமுகமாய் அறிமுகமாய்....

No comments: